×

ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு

 

மதுரை, மே 6: மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆதரவற்றோர் மற்றும் யாசகம் பெறுவோரை மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் வகித்தார். மதுரை நகர காவல்துறை மற்றும் காவல் கரங்கள் இணைத்து ஆதரவற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் யாசகம் பெறுவோரை மீட்டு அவர்களின் குடும்பத்தாருடன் இணைத்தல் அல்லது மறுவாழ்வு மையத்தில் சேர்த்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இதில் மறுவாழ்வு மைய அதிகாரிகள், அரசு ராஜாஜி மருத்துவமனை மனநல மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Police Commissioner ,Yasakam ,Police Commissioner ,Loganathan ,Madurai City Police ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் ஆதரவற்று சுற்றித்...